Sunday, February 21, 2016

அமெரிக்காவில் நில போராட்டம்



  அமெரிக்காவை நமக்கு தெரிந்தவரை ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி பெற்ற மாநிலங்கள், அம்மாநிலகங்களை அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் மாநில வரி,காவல்துறை ,சட்ட ஒழுங்கு பாதுகாப்பு,வாகன உரிமை மற்றும் ஓட்டும் உரிமை எல்லாம் சுயேச்சை பெற்றது .அதுபோல் சுயாட்சி பெற்ற மாநிலங்கள் என்றால் அம்மாநிலத்தின் நிலங்கள் அந்த மாநில அரசின் பொறுப்பில் அதாவது அந்த நகர அல்லது ஊராட்சியிடம் (county ) இருப்பதாக தான் நாம் எதிர் பார்க்கமுடியும். ஆனால் மேற்கு கரையில் உள்ள மாநிலங்கள் நிலை வேறு. நெவேடா - 81%, யூடாஹ் -57%, நெவேடா- 84.5% , ஒரேகோன் - 53% மத்திய அரசின் (Federal government ) கட்டுப்பாட்டில் உள்ளது.





இந்த நிலங்களை மத்திய அரசின் நான்கு நிறுவனங்கள் மேலாண்மை செய்கின்றன. அவை அமெரிக்க காடுகள் சேவை(USFS ) இது நாம் பயணிக்க கூடிய காடுகள் பராமரிப்பு,மற்றும் மேற்பார்வை , மர வியாபாரம் மற்றும் மிருகங்கள் பாதுகாப்பு.அமெரிக்க பூங்கா காப்பகம் (NFS ) -இந்த மத்திய அரசு நிறுவனம் தான் நாம் சுற்றுலா சென்று பார்க்க கூடிய நிலங்களை பாதுகாக்கின்றன. யோஷிமிடே காடு (Yosimite national forest), கரண்ட் கேன்யன் (Grand canyon ) ஒரு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.அடுத்து மீன் மற்றும் வனவிலங்கு காப்பகம் (WFS ). இந்த முன்று நிறுவனங்களும் 360 மில்லியன் ஏக்கர் நிலங்களை பராமரிக்கின்றன.இதை விட முக்கியமான அரசு நிறுவனமான நில மேலாண்மை நிறுவனம்(BLM - Bureau of land management ) அது தான் சுமார் 280 மில்லியன் ஏக்கர் நிலங்களை பராமரிக்கிறது. இந்த நில அளவு இந்தியாவின்  30-40% அளவுக்கு மிக பெரிய நிலங்களாகும் .BLM நிலங்களை கரி,நிலவாயு மற்றும் பல கனிம வளங்களை எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு குத்தகை விடுகிறது, மற்றும் மாடுகளை  வளர்க்க மற்றும்  மைய்சல் நிலங்களாக உபயோகிக்க அனுமதி வழங்குவது போன்ற நில மேலாண்மை செய்கிறது.

ஒரேகோன் மாநிலத்தில் போர்ட்லன்ட் நகரத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 300 மைல் தொலைவில் உள்ள சிறு நகரம் பர்ன்ஸ்(Burns ). அன் நகரத்தின் சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது மால்ஹுவேர் மத்திய காடு (Malheur national forest ). இங்கு உள்ள மத்திய அரசின் அலுவலகத்தை சுமார் 16 பேர் அக்கரமித்து கொண்டனர் .இதை தலைமை தாங்கி நடத்தியவர் அம்மோன் பண்டி (Ammon Bundy ). இந்த போராட்டத்தை எடுத்த முக்கிய காரணமாக கருதபடுவது ,இந்த மத்திய அரசின் நிலங்களுக்கு பக்கத்தில் இங்கு பண்ணைகள் நடத்தி வந்த தந்தையும் ,மகனும் ஆன ஹம்மொண்ட்ஸ்(Hammonds )அவர்கள் அரசு நிலங்களில் அத்து மீறி நுழைந்து மாடுகள் மேய்த்ததாகவும்,வேட்டையாடி மிருகங்களை கொன்றதாக மற்றும் மத்திய அரசின் நிலத்தை தவறாக பயன் படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு 5 வருட சிறை தண்டனையில் உள்ளனர்.அவர்களின் பொய் குற்றத்திற்காக சிறையில் இருந்து விடுதலை பெறவும் மற்றும் மத்திய அரசின் நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டி போராட்டம் தொடங்கபட்டது. இத்தகைய போரட்டத்தை எடுக்கும் படி கடவுள் தன் கனவில் வந்து கட்டளையை தான் தொடங்குவதாக அறிவித்தார். அதில் பெண்கள் மற்றும் குடும்பங்களுடன்  சுமார் 16 பேர் இருந்தனர்.

இந்த போரட்டங்களை புரிந்து கொள்ள அமெரிக்க சுதந்திர போராட்ட வரலாறை சற்று திரும்பி பார்க்கலாம். அமெரிக்காவின் முதல் சுதந்திர போரட்டங்கள் குடியிற் சட்டமறுப்பு போராட்டங்கள் முலம் தான் தொடங்கின . பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரி கொள்கையை எதிர்த்து தொடங்கியது.அதை தொடர்ந்து கிழக்கு கரையோரம் உள்ள மாநிலங்கள் பிரிட்டிஷ் மன்னராட்சியை எதிர்த்து 13 மாநிலங்கள் ஒன்றிணைந்து 1776 ஜூலை மாதத்தில் சுயாட்சியை அறிவித்தது . முதல் ஜனாதிபதியாக ஜார்ஜ் வாஷிங்டன் பதவியேற்றார் .

அமெரிக்காவை சேர்ந்த ஹென்றி டேவிட் தொரியு(Hendry david thoreau ) அவர்களின் குடியிற் சட்டமறுப்பு (Civil disobedience ) கட்டுரை தான் முதலில் அரசை கொடுங்கோன்மைக்கு எதிர்த்து போராடும் யுத்தியாக எடுத்துரைக்க பட்டது,ஒரு குழுவாக அரசின் கொள்கை மக்களின் விரோதமாக இருக்கும் பொழுது அதை எதிர்த்து போராட பயன் படுத்தும் ஆயுதமாக சொல்லப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்கள் அஹிம்சை முறை முலம் தொரியு அவர்களின் கொள்கையை விரிவடைய செய்து இந்த போரட்ட யுத்தியை மக்களிடம் எடுத்து சென்றார்.   ஆயுதமின்றி ஒரு போராட்டத்தை உலகத்திற்கு நடைமுறை படுத்தி காட்டினார். அதன் வரலாற்றை நான் அறிவோம்!அமெரிக்காவில் கருப்பர் இன குடிமக்களின் உரிமை சட்டத்தை பெற சுமார் 175 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது அமெரிக்காவில்  இதை முன்னின்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்ற தலைவர்களுடன் போராட்டத்தை நடத்தினார்






1964யில் தான் அமெரிக்காவில் கறுப்பினர் இனத்திற்கும் சமமாக நடத்தும் குடிசார் உரிமை சட்டம் நிறைவேற்றபட்டது. இந்த சட்டம் தான் கறுப்பினத்தவரை சமமாக பாவிக்கும் சட்டம் அமுலுக்கு வந்தது. இன்று நாம் அமெரிக்க வந்து பணிபுரிய மற்றும் குடியுறுமை (green card ) உதவும் சட்டமாகிய குடியேற்றம் மற்றும் தேசிய சட்டம் (Immigration and nationality act of 1965) தான். இரோப்பியாவில் இருந்து மட்டும் அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாமல் உலகின் பிற பகுதிகளான இந்திய ஆப்ரிக்கா என்று எல்லோரும் குடிபுக வாய்ப்பு கிடைத்தது.அதனால் நாம் என்றும் அமெரிக்க கறுப்பினத்தவருக்கு கடமைபட்டுள்ளோம் .




இந்த போரட்டமும் இன்றி உலகின் பல போரட்டங்கள் குடியிற் சட்டமறுப்பு போரட்டங்கள் முலம் தான் வெற்றி பெற்றது. அண்மையில் ஆப்ரிக்கா நாடான லைபிரிய உள்நாட்டு போர் நிறுத்தமும் இந்த போராட்டம் ஒரு விசித்திரம் நிறைந்தது.இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ' பழங்குடியினர் பல வருடங்களாக ஆயுதம் தாங்கி சண்டையிட்டு வந்தனர் . அங்கு வாழும் ஆப்ரிக்கா பெண்மணி லேய்மஹா பொவீ (Lehmah Bhovee ) மற்றும் அவர் குழுவினருடன் சேர்ந்து , இனி முஸ்லிம் மற்றும் கிருஸ்தவ பெண்கள் ஆண்களுடன் அகபத்தியம் ( உடலுறவு ) கொள்வதை நிறுத்துவதாக அறிவித்தனர் , இந்த  போரட்டத்தில் விலைமாதர்களும் கலந்து கொண்டனர்  அவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினர் . இந்த போரட்டத்தின் விளைவாக இரு குழுவினரும் பேச்சு வார்த்தை நடத்தினர் . பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இரு குழுவினரும் வளாகத்தை விட்டு செல்லும் பொழுது இந்த அம்மையார் தான் தன் உடைகளை களைய போவதாக அறிவித்தார் , தன் தாயின் வயதில் இருப்பவரை நிர்வாணமாக பார்ப்பது மிக பெரிய பாவ செயலாக ஆப்பிரிக்கா கண்டத்தில் பார்க்கப்படுகிறது . அதனால் இரு குழுவினரும் பேசி சுமுகமான முடிவுக்கு வந்தனர் . இந்த போராட்டம் முலம் தான் அமைதி லைபீரியாவில் அமைதி திரும்பி பெற முடிந்தது. அதற்காக லேய்மஹா பொவீ (Leymah Gbovee ) 2001 அமைதி கான நோபெல் பரிசு கிடைத்தது.





தன் நாட்டில் ஒரு 16 பேர்கள் ஒரு அரசு அலுவகத்தை அக்ரமித்தவர்களை தடுக்க அரசு கையாண்ட விதம் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .எந்த அரசாங்கமும் போரட்டங்களை முளையிலேயே அழிக்க நினைக்கிறது.அதிகாரவர்கத்தினரை  எதிர்த்து கேள்வி கேட்பதை நசுக்கபார்க்கிறது.இந்த போராட்டத்தில் பங்கு கொண்ட லவாய் ஃபினிகம்(LaVoy Finicum ) என்பவர் அவர்களுக்கு ஆதரவு தந்து ஒரு குழுவினருடன் ஒரு சமுக சந்திப்புக்கு செல்லும் வழியில் மத்திய புலனாய்வு துறை (FBI ) துறையால் சுட்டு கொல்லப்பட்டார்.அதற்கு புலனாய்வு பிரிவு அவர் எங்களை சுட வந்தார் என்று கூரினர், அனால் தற்காப்புக்காக பின்னால் இருந்து சுட்டு கொன்றனர்.அதை நிருபிக்க ஒரு காணொளி(https://www.youtube.com/watch?v=gjl1hefqqWI) வெளியிட்டனர். அவருடன் பயணித்த ஒரு பெண்மணி அவர் துப்பாக்கி எடுக்கவில்லை என்று பிறகு வாக்குமுலம் கொடுத்துள்ளார்.பின்பு சுடப்பட்ட லவாய் அவருடன் வந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய எம்மான் பண்டி மற்றும் அவர் சகோதரர் கைது செய்து முல்டிநோமாஹ்(Multinomah) சிறையில் அடைத்தது. ஜாமீன் பெற முடியாத வழக்கை பதிவு செய்தது.

அதன்பிறகும் நான்கு பேர் அந்த ஆக்கரமிப்பை விட்டு வராமல் இருந்தனர்.அவர்களின் பாதுகாப்பிற்க்காக அவர்கள் ஆக்கிரமிப்பை கைவிடும்படி எம்மான் பண்டி முறையிட்டார். பின்பு நெவாடா மாநிலத்தின் மக்கள் பிரதிநிதி அம்மையார் மிசெலே ஃ பயோரியா(Michele Fioria ) மற்றும் பில்லி கிரகாம்(Billy Graham )அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களும் சரண் அடைந்தனர் .இந்த போராட்டத்தில் பங்கெடுத்த மக்களை அரசு அதிகாரிகளை அவர்களுடைய கடமையை செய்யவிடாமல் தவிர்த்தது. வன்முறை முறையில் துப்பாக்கி கொண்டு வன மேர்பார்வை அலுவலகத்தை அபகரித்தது. அமெரிக்காவை எதிர்த்து போர் புறிந்த குற்றம் சாட்டப்பட்டது . 15 பேரையும் கைது செய்து ஜாமீனில் வெளி வரமுடியாமல் சிறையில் அடைத்தது .இந்த போராட்டம் சுமார் 41 நாட்கள் நடந்தது . இதே போராட்டத்தை கறுப்பின மக்கள் செய்திருந்தால் அரசாங்கம் 41 நாட்கள் காத்திருக்குமா , 41 நிமிடங்களில்  பிரச்னையை திர்த்திருக்கும்  என மக்கள் FB கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தர போர்ட்லன்ட் வந்த எம்மான் பண்டியின் தந்தை கிளிவேன் பண்டி (Cliven bunty ) ஜாமீனில் வெளிவர முடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவரின் சொந்த மாநிலமான நெவாடாவுக்கு சிறைக்கு அனுப்பப்பட்டார். இவருக்கும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. 2014 இவர் ஒரு அத்துமிறி காட்டில் மாடு மேயித்த குற்றத்திற்காக சுமார் 2 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க பட்டார்  , இவரின் மாட்டை ஜப்தி செய்ய BLM அதிகாரிகள் வரும் பொழுது சுமார் 400 பேர் இதில் பாதி பேர் துப்பாக்கி கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர் , அதனால் மத்திய நில அதிகாரிகள் திரும்பி சென்றனர். அந்த போராட்டத்திற்கு இப்பொழுது கைது 2016யில் கைது செய்யபட்டுள்ளார்.இந்த போராட்டத்தில் முன்பு கலந்து கொண்டவர் தான் மிசெலே ஃபயோரியா .







இந்த நிலங்களின் பிரச்சனை வெள்ளையின அமெரிக்கர்களுக்கு முன்பே தொன்ம குடி மக்களான பைடுஸ்(Paitus ) இனத்தவர் இருந்து 1.5 மில்லியன் ஏக்கர் நிலங்களி 1895 எடுத்துகொண்டது. இதற்கு இழப்புக்கு இடாக 1 சென்ட் ஒரு ஏக்கர் விதம் 90 வருடங்கள் கழித்து இப்பொழுது தான் கொடுத்தது .எல்லாம் செலவும் போக , பிரித்து கொடுத்த பொழுது அவர்களில் ஒருவருக்கு 730$ வந்து சேர்ந்தது. இன்று இவர்களின் பரிசினை இருட்டிக்க பட்டது. இன்று எம்மான் பண்டி மத்திய அரசின் நிலங்கள் பண்ணையாளர்களிடம் திரும்பி ஒப்படைக்க போராடுகின்றனர், அதனால் இவர்களுடைய உரிமையும் இவர்களின் பரிசினை மறக்கபடுகிறது.




இந்த போரட்டங்களும் இதன் விளைவுகளும் இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது, இந்த நிலம் அரசுக்கு சொந்தமாக இருக்கவேண்டுமா? பண்ணையாளர்களுக்கா ? இல்லை தொன்ம குடிமக்களுக்கா இதை காலம் தான் முடிவு சொல்லமுடியும்.


(தொடரலாம்)

குறிப்பு:
http://bigthink.com/strange-maps/291-federal-lands-in-the-us
https://www.washingtonpost.com/news/post-nation/wp/2016/02/11/cliven-bundy-arrested-as-oregon-refuge-occupation-nears-possible-ending/?hpid=hp_hp-top-table-main_occupiers-935pm%3Ahomepage%2Fstory
https://www.washingtonpost.com/news/post-nation/wp/2016/02/11/cliven-bundy-arrested-as-oregon-refuge-occupation-nears-possible-ending/
https://en.wikipedia.org/wiki/African-American_Civil_Rights_Movement_(1954%E2%80%9368)
https://en.wikipedia.org/wiki/Civil_disobedience
http://www.goodreads.com/quotes/tag/civil-disobedience
http://www.cbsnews.com/news/cliven-bundy-ammon-bundy-ryan-bundy-federal-indictment-nevada-oregon-standoff/
http://www.nytimes.com/2016/01/27/us/oregon-armed-group-arrest-bundy.html?_r=0
https://www.washingtonpost.com/blogs/govbeat/wp/2014/12/01/utah-could-make-more-than-300-million-a-year-if-it-took-over-federally-controlled-land/
http://www.cnn.com/2016/02/02/us/witness-lavoy-finicum-killed-oregon/index.html?eref=rss_latest
http://www.kgw.com/news/local/ammon-bundy-court-hearing-oregon-standoff/31616906
http://www.oregonlive.com/oregon-standoff/2016/02/burns_paiutes_to_ammon_bundy_y.html
http://www.oregonlive.com/opinion/index.ssf/2016/01/in_harney_county_may_the_anarc.html

https://www.hcn.org/articles/malheur-occupation-oregon-ammon-bundy-public-lands-essay