Monday, August 31, 2020

ஆற்றாதார் அழுத கண்ணீர்




                                ஆற்றாதார் அழுத கண்ணீர்


              பஞ்சம்  அவனை நகரம்   நோக்கி விரட்டியது,
              நோய் அவனை ஊர் நோக்கி திருப்பியது            

             அரசு மக்களை கைவிடும்போது அவன் நம்புவது 
             தன் புலன்களையும்,  ஊரையும், உறவையும்.

             கனவை துறந்து பசியை சுமந்து
            அவன் கடந்து சென்றன மலைகளும்,
            வனங்களும் ,பேராறுகளும் 

            தேசிய சாலைவழியாக
           சில சமயம் அவன் மேல் வாகனங்களும்    

           தினம் கூட்டும் கணுக்குகள்  அல்ல உயிர்கள் 
           அந்த எண்ணுக்குள் மறைந்திருப்பவை - 
           தாய்கள்,தந்தைகள் பிள்ளைகள், நண்பர்கள்!  
  
           ஒரு  பிணைப்பு, அவை அறுபடும் பொது 
           ஒரு பூ பூமியில்  எங்கோ பூக்கிறது.

          கண்ணுக்குள் அடங்காத  ஒரு நுண்ணுயிர் 
          மனித குலத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது 
         மனிதனுக்கு துணை பேரன்பும்  மனித நேயமும்.


                                                                ஆனந்த்