Sunday, September 11, 2016

வீடற்ற அமெரிக்கர்கள்



                              
                                                                    வீடற்ற அமெரிக்கர்கள்

   
    அமெரிக்காவின் முதல்  முன்று பிரச்சனைகள்  , துப்பாக்கி கலாச்சாரம், நிறவெறி அடுத்ததாக வீடற்ற அமெரிக்க குடிமக்கள்(Homeless).   அமெரிக்காவில் மட்டும் 35 லட்சம் வீடற்ற மக்கள் வாழ்கின்றனர். அதில் குழந்தைகள் சுமார் 1 லட்சம் அடங்கும். உலகில் எங்கும் வீடற்ற மக்கள் இருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் இதை பார்ப்பது என்ன காரணம்  என்று எப்பொழுதும் யோசிக்க வைக்கும் அமெரிக்காவில்  பெரும் நிலப்பகுதி, ஒவ்வொரு வீடும்  நம் தேவைக்கு அதிகமான இட வசதி கொண்டவை. உலகின் பொருளாதரத்தில் முதலில் உள்ள நாடு. வீடற்ற நிலைமைக்கு மக்களை கொண்டுசெல்லும் காரணம் என்னவென்று தெரிந்த  கொள்ள ஆர்வம். 


சில வாரங்களுக்கு முன்  வாஷிங்டன்போஸ்ட் நாளிதழில்   ஒரு 80 வயது பெண்மணி தனக்கு அரசாங்க சமூக  பாதுகாப்பின்  வழியாக  100000$ வரவேண்டும் என 10 வருடங்களாக  போராடி இப்பொழுது  தான் பெற்றார். அவர் 40 ஆண்டுகள் வேலைசெய்து சேர்த்த பணம். வேலையிழந்த தன பெண்ணுக்கு பாரமாக  இருக்கக்கூடாது என  அவளுக்கு  தெரியாமல் வாஷிங்டன் தலைநகரில்  ஹோமேல்ஸ் இருந்து வந்தார். இந்த செய்தி என்னை மிக ஆச்சிர்யத்தில் ஆழ்த்தியது.  நாம்  பொதுவாக  நினைப்பது போல   வீடற்ற  மக்கள்  போதை  மற்றும் குடி, மனப்பிறழ்வும்  மற்றும் கரணம் அல்ல என்று தோன்றியது.

போர்ட்லேண்ட் ஒரு வித்யாசமான  நகரம். இங்கு  மேயர்  அரசின் பொதுஇடங்களில் வீடற்ற  மக்கள் டென்ட் அடித்து  பொதுமக்களுக்கு தங்கலாம் என  அறிவித்துவிட்டார். அதனால் நான் ஹிக்கிங் செல்லும்பொழுது  கூட  வரும் அமெரிக்கர்கள்  அவரை கழுவி கழுவி  ஊற்றுவார்கள் , எப்பொழுதும் இந்த பிரச்சனையை பேசுவார்கள்  ஒரு பணக்கார  தனத்துடன்  எதோ வேண்டாத மக்கள் தன இடத்தை வந்து பிடித்துக்கொண்டதாக புலம்புவார்கள்.அதனால் பல நாட்களாக    போர்ட்லேண்ட்  நகரில் வாழும்  வீடற்ற மக்களுடன் பேசி அதை புரிந்து  கொள்ள  முயலவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் போர்ட்லேண்ட் நகரம் செல்லும் பொழுது தோன்றும். 

இன்று(செப்டம்பர் 11)  போர்ட்லேண்ட்  நகரில் உள்ள  சினிமா  21 என்ற அரங்கில்  "hunt  for the  wilder people "  படம் பார்த்துவிட்டு வடமேற்கு போர்ட்லேண்ட் கறுப்பினர் வாழும்  நகரம்  என்றும் அதிக வன்முறை நடக்கும் இடம் என்று  கேள்வி பட்டிருப்பதால் அங்கு எப்படி இருக்கிறது என்று   பார்க்கும்  ஆர்வத்துடன் தெருக்களில்  சுற்றி வந்தேன். 
அப்படி ஒன்றும் கருப்பு இனத்தவரை பார்க்க முடியவில்லை, பழைய வீடுகள் நிறைந்த  தெருக்கள் கொண்ட வீடுகள் இருந்தன. போர்ட்லேண்ட்  நகரில்   எப்பொழுதும் பார்ப்பது போல  வீடற்ற மக்கள் தெருக்களில் இருந்தனர்.

அவர்களை மிக எளிதாக  உணர  முடியும்   வெளிர் கண்கள் , உணவு குறைவாக  உண்பதால் சற்றே மெலிந்த உடல் வாகு , பல நாள் குளிக்காமல் பல்விளக்காமல் பரட்டை தலையுடன் திரிவர்.கண்களில் போதை , தமக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்று தெரிந்தும் கூடவே ஒரு நாய் , நான் ஒரு  முறை ஒரு தாய்  இரு குழந்தைகளுடன்  பார்த்திருக்கிறேன்.

சாலையோரத்தில் ஒரு இளம் வயது பெண்மணி நின்றி  1$ நாளிதழ் விற்றுக்கொண்டிருந்தாள். மெலிய உடல்வாகு , Caucasian உரிய பொன்னிற சுருண்ட கூந்தல் ஆனால் பல நாள்  தலைக்கு குளிக்காமல் அது காய்ந்து போய் இருந்தது. கண்கள் வெளிறி அதில் ஈரம் இழந்து வறண்டு தோன்றியது . அவள் பூக்கள் அச்சடித்த நீண்ட முழங்கால் வரை கவுன் மற்றும் சிவப்பு டிஷர்ட் அணித்துஇருந்தாள்.அது இன்னும் அழுக்கு படியாமல் வீடற்ற மக்களின் கந்தல் ஆடி நிலைக்கு செல்லவில்லை. அவள் இந்த படத்தில் இருந்த புன்னகையை இழந்து கன்னங்கள் ஒட்டி மெலிந்தியிருந்தாள் 





நான் அவளை கடந்து பக்கத்தில் உள்ள ஒரு பழைய புத்தக கடையை சென்று புத்தகங்களை பார்த்தேன் . என் மனம் அந்த பெண்ணை தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியது.திரும்பி வந்து 1 $ கொடுத்து "street roots " என்ற இதழை அவளிடம்  வாங்கினேன். சுற்ற தயக்கத்துடன் நான் உங்களுடன் பேசலாமா என்று கேட்டேன். அவளும் சற்று தயக்கத்துடன் சரி என்றாள். 

நான் நேரடியாக அவளை கேட்டேன்  are  you  homeless ? என்று அவள் ஆமாம் என்றார் 

ஏன்? என்றபொழுது இந்த நாட்டில் யார் எப்பொழுது வேண்டும் என்றாலும் வீடற்ற மக்கள் ஆகும் வாய்ப்பு அதிகம் என்றாள் .

அவள் இண்டியானா மாநிலத்தில் இளநிலை படித்துவிட்டு போர்ட்லேண்ட் முதுநிலை பட்டம் பெற வந்து, அறை  நண்பனோ அல்லது நண்பியோ வின் வன்முறை மற்றும்  அடிமைத்தனத்தை  தாங்க  முடியாமல் வெளியேறி , சில வாரங்கள் கல்லூரி நண்பர்களுடன் தங்கிக்கொண்டு இருந்து போன மாதத்தில் இருந்து தங்க கூரையின்றி   பூங்காவில் டென்ட் அடித்து தங்குவதாக சொன்னாள். அவளுக்கு  தாய் தந்தையர் ஊரில் உள்ளனர், அனால் அவள் அவர்களை தேடி திரும்பி செல்ல விரும்பவில்லை. காரணம் அவரகள் ஒரு atheist  கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் மற்றும் அவர்கள் என்னை  இந்த நிலையில் இருப்பதால் வெறுப்புடன் என்னை ஏற்றுக்கொள்வதை என் மனம் ஒப்பவில்லை என்று சொன்னாள். பட்டம் பெற்ற  நீ ஏன் ஒரு வேலை தேடவில்லை என்ற கேட்டபொழுது  தான் தேடுவதாகவும் வீடற்ற மக்களை வேலையில் அமர்த்துபவர்கள் எளிதாக அவர்களின் முட்டைகள் மற்றும் அவர்கள் பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவர். மற்றும் வீடற்ற மக்கள் சோம்பேறிகள் , வாழ்க்கையில் முன்னேறும் எண்ணம் அற்றவர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் உள்ளதால் வேலை கிடைப்பது சிரமம் என்று சொன்னாள். நீ நம்பிக்கையுடன் ஒரு நாள் இந்த நிலையில் இருந்து மீண்டுவிடுவாய் என்று நம்புகிறாயா? இல்லை வாழ்நாள் முழுக்க தெருவாசியாக இருப்பாயா? தான் அரசாங்க உதவி வீட்டுக்கு கேட்டிருப்பதாகவும் அது இந்த கிறிஸ்துமஸ் முன் கிடைத்தவுடன் நான் வீட்டிற்கு செல்வேன் என்று சொன்னாள் மற்றும் வேலை கிடைக்க  முயன்று கொண்டிருக்கும் வழிகளை சொன்னாள்.

வீடு வாடகை மிக அதிகமாக ஆனது தான் வீடற்ற  மக்கள் உருவாக முக்கிய காரணம் , வேலை இழப்பு , திடீர் என வீட்டில் உள்ளவர்க்கு உடல் நிலை சரியில்லாமல் செல்வது அதனால் வீட்டைவிட்டு வெளியேறும் நிலைமை, விவாகரத்து  ஆகிய பல காரணங்கள். 

வெளியூரில் இருந்து நாம் இங்கு வந்து எதோ வகையில் பிழைக்கிறோம் இங்கு பிறந்து வளர்ந்த மக்கள் உணவுக்கும் இருப்பிடத்திற்கு அலைகின்றனர் , இந்தியாவிலும தெருவில் வாழும் மக்கள் உள்ளனர், ஆனால்  படித்து தாய் தந்தையர் சொந்தங்கள் இருந்து அனாதையாய் வாழும் நிலை வரவில்லை.

அடுத்த முறை ஒரு வீடற்றவனை பார்க்கும் பொழுது ஒரு கரிசனத்துடன் அணுகுங்கள், எதோ ஒரு பிரச்னை அவர்களை இங்கே கொண்டு வந்துள்ளது அதை கடக்க சிறிய உதவி செய்வதற்கு தயங்காதீர்கள். இந்த உலகத்தில் ஒரு மனிதன் இன்னொருவனை நேசிக்கிறான் என்று கடவுளுக்கு உணர்த்துங்கள்.


https://www.washingtonpost.com/local/i-wasnt-crazy-a-homeless-womans-long-war-to-prove-the-feds-owe-her-100000/2016/08/22/3913e4c2-6541-11e6-8b27-bb8ba39497a2_story.html


http://www.homeaid.org/homeaid-stories/69/top-causes-of-homelessness

www .streetroots.org 


டேவிட்  - புதிய பருவம் வீடற்றவன் - ஏப்ரல் 29
நான் காலை உணவு நியூ சீசன் வயறு நிறைய சாப்பிட்டுவிட்டு திரும்பும் பொழுது ஒரு மனிதன் கார்டில் பொருட்களுடன் பேருந்து நிலையத்தில் நின்று  கொண்டிருந்தான்.அவன் சாப்பிட்டு இருப்பானோ என்ற எண்ணம் வர காரை ஒரு குறுக்கு சாலையில்  தெருவில் நிறுத்திவிட்டு நடந்து சென்று அவனுடன் பேசினேன். நீண்ட கூந்தலும் கண்ணில் சிறு போதையும் கைகளில் சிராய்ப்பு களுடன். இருந்தான். அவனிடம் நீ எங்கு தங்குவாய் என்று கேட்டபொழுது அவன் இந்த சாலையில் இங்கு தன தங்குவேன் இல்லை என்றல் Forest grove என்ற அடுத்த ஊரில் தங்குவதாக சொன்னான்.இங்கு பல  பீர்  கேன் மற்றும் பாட்டில் எடுத்து மறுசுழற்ச்சி போட்டு பணம் எடுப்பதாக சொன்னான். பத்து வருடங்களாக வீடற்றவனாக வாழ்வதாகவும் இந்த முறை இரவில் அடைக்கலம் தேடாமல் குளிரில் வாழ்ந்த பார்க்க முயன்றதாகவும் சொன்னான்.இந்த வருடம் தான் மிகவும் மழையும் குளிரும் அதிகமாக இருந்த காலம்.வாழ்வின் மாற்றங்களை தேடும் மனிதனின் எண்ணம் தன்னை இன்னும் ஒரு படி மேலே போராட துணிவை தான் காட்டுகிறது. வீடற்றவனுக்கு குறிக்கோள் இல்லை என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது. இரவில் பெருங்குளிரில் தான் மற்றவர்களுக்கு நடந்து சென்று பீர் வாங்கி வருவதும்  சில நாள்  சூடான சூப் வாங்கி வந்து தாங்கள் பகிர்ந்து குளிரில் அதன் வேதுமையை மகிழிந்ததாகவும் அவனின் சொற்கள் என்னை வியக்க வைத்தது.அந்த வார்த்தைகளில் பெருமையோ அற்று சாதாரணமாக கடந்து சென்றது அவனிடம் இருந்து. அந்த செயலில் அவன் அடையும் திருப்தி ஒருபோதும் நம்மால் உன்னர முடியாது.

தான் கலிபோர்னியாவில் இருந்த பொழுது ஒருவன் தன்னை காலை தடுக்கி விழவைத்து ஒன்றை மாதம் கோமாவில் இருந்த தாகவும் அதனால் தன்னால்  ஒரு வேளைக்கு செல்ல முடியாத நிலைமையில் இருந்து தன்னை ஒரு பெண்மணி  தனக்கு தாயாக அறிவுரை சொல்லி இந்த பீர்  கேன்களை எடுத்து விற்கும் வேலை செய்வதாக சொன்னான்.வரம் 100$ அரசாங்கம் தருவதாகவும் அதனை கொண்டு பொருட்களை வாங்கி சேகரிப்பதாகவும் , தனக்கு அரசாங்கம் வீடு(Affordable housing ) தரும்பொழுது உபயோகிக்க. அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னிறுமையும் . பிறகு ஆண்களில் வயதிற்கு ஏற்ப முன்னிருமை தருவதாகவும் தனக்கு 33 வயதான பிறகு தான் வீடு கிடைக்கும் என சொன்னான். அதனால் இன்னும் இரண்டு வருடங்கள் வீடற்றவனாக வாழ்க்கை பயணத்தை எதிர் நோக்கி கொண்டிருப்பதாக தன் வாழ்க்கையின் பயணத்தை பகிர்த்தான்.

தான் வனத்தோப்பில் ஒரு  தார்பாலின் கொண்டு விடு கட்ட முயன்றதாகவும் அதை கட்டி முடித்து அங்கு குடியேற சென்ற பொழுது தேனிக்கள் குடு கட்டி கொண்ட அந்த தோப்பில் ஒரு நாள் அவை அவனை துரத்தியதாகவும் அதனால் மண்ணில் பிரண்டு அவைகளிடம் இருந்தது தப்பிக்க முயன்று, பிறகு நெருப்பை கொளுத்தி அவற்றை விரட்ட நினைத்த பொழுது தன விடும் எறிந்து  விட்டதாகவும் திரும்பவும் விடு கட்ட முயல்வதாக சொன்னான்.

ஒரு வழிப்போக்கனுடன்   பேசுவது ஒரு நல்ல அனுபவம் . என் எனில் அவன் நம்மை  ஆராயப்போவதில்லை மற்றும் பிறகு அவனை நாம் பார்க்கவும் போவதில்லை அதனால் உள்ளத்தில் இருந்து பேச முடியும்.



































No comments: